ந'மக்கு' நாமே!
Posted Date : 15:03 (08/03/2012)Last updated : 15:03 (08/03/2012)

- பகவத் அருண்

சமீபத்தில் 'நண்பன்' படம் பார்க்கப் போயிருந்தேன். மனதில் புதைந்துப்போன பல கேள்விகளையும் கோபங்களையும் அது தட்டி எழுப்பி விட்டது.

எனது 3ம் வகுப்பில் குப்பை தாள்களை வைத்து வகுப்பறையில் பல கலையம்சங்களை படைத்த தோழி அனிதா.. வீட்டிலும் வகுப்பிலும் மக்கு மாணவியே.  9-ம் வகுப்பில் சிறு காந்தங்களை வைத்து பொம்மை கார்களை அறிவியல் வகுப்புகளில் ரகசியமாக ஓட வைத்த நண்பன் வினோத் 10ம் வகுப்பில் அறிவியலில் தோல்வி..

மொக்கை போடும் தமிழ் வகுப்பில் நாங்கள் போடும் வாத்தியார் நையாண்டி நாடகங்கள் தான் எத்தனை அழகான இலக்கியம், அதிகார எள்ளல் இலக்கியம், புறக்கணிக்கப்பட்ட இலக்கியம்... பூட்டி விட்ட வகுப்பறையில் சிக்கி விட்ட வாத்தியாரின் பையை நுட்பத்தோடு எடுத்துக் கொடுத்த அந்த கடைசி பெஞ்ச் 'மக்கு' மாணவனுக்கு கிடைத்த பாராட்டு ' நீ இதற்குத்தான் லாயக்கு ! '

12ம் வகுப்பு வேதியியல் லேப்பில், பாடத்தில் அல்லாத புது வேதிவினைப் பயனை கொண்டு வந்த மாணவனுக்கு டியூபை உடைத்தற்கு அடுத்த நாள் விதிக்கப்பட்டது 50 ரூபாய் அபராதம். 11ஆம் வகுப்பில் கணிதத்தில் தோல்வியடைந்ததற்காக முட்டி போட வைக்கப்பட்ட சுரேஷ் அந்த 20 நிமிடத்தில் மண்ணில் வரைந்தது எப்பேற்பட்ட கலை.. வலியும் புறக்கணிப்பும் வெளிப்பட்ட அற்புதமான ஓவியம் அது. அதற்கு அவனுக்கு கிடைத்தது இன்னும் 20 நிமிட முட்டி தான்.

கல்லூரியில் உயிர் வேதியியல் தேர்வில் மரபணு சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு மட்டுமே நான் இரண்டரை மணி நேரமும் என்னையறியாமல் விடையை தாண்டி பல புதிய புதிய சாத்தியங்களை வரையறுத்ததற்காக எனக்கு கிடைத்தது 100க்கு 12 மதிப்பெண்ணும் துறையிலேயே குறைந்த மதிப்பெண் என்ற பட்டமும். ஆனால்,  நிச்சயம் என்  வாழ்விலேயே ரசித்து அனுபவித்து எழுதிய ஒரே தேர்வு அதுதான். நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று புதிதாக கண்டறியப்பட்டிருந்தது.

இப்படி எத்தனை விஞ்ஞானிகளை, கலைஞர்களை தொழில்நுட்ப வல்லுனர்களை மக்கு மக்கு என பட்டம் கட்டி , காலம் முழுக்க தலையாட்டும் ஆட்டு மந்தைகளை ஊக்குவித்து, ஜெயித்தவன் புத்திசாலி என்று கூறிக்கொள்ளுங்கள்.. நாங்கள் விமர்சிக்கவில்லை..
ஆனால் ஒரேயொரு கேள்வி.. உங்களால் மக்கு பட்டம் பெற்றவன் நாளை விஞ்ஞானியாகவோ கலைஞனாகவோ ஆகும்பொழுது மக்கு பட்டம் கட்டிய நீங்கள் தானே மக்கு?

ஐன்ஸ்டீன், எடிசன் என வரலாறும் இதனை நிரூபித்தே வந்திருக்கிறது. தூக்கி இடுப்பில் வைத்து கொஞ்சுங்கள் உங்கள் மந்தை கூட்ட செல்லப்பிள்ளைகளை.. நாங்கள் பெருமையோடு இருக்கிறோம் சுயம் உள்ள மக்குகளாகவே..!
 

உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
Somasundaram1 Years ago
நண்பன் படத்தை விடவும் அதிகமான உதாரணங்களை வழங்கிய பகவத் அருண்க்கு நன்றி.
Dipthi1 Years ago
Nanban is a great film which should be watched by all parents especially who forces their son or daughter to become a person whom they wants to be.Parents should know the intrest of their child and atleast try to fulfill it.
shri puppy1 Years ago
ya it's absolutely correct.
now a days it was going on our nation's schools.
only studies is not make a man as perfect.
every man has a own interest and own inventions.
we should encourage every man's interest.
if it was done successfully our nation could reach the developed nation place quickly.
Ashwin1 Years ago
Hi,
School education aims to provide a fundamental THEORETICAL KNOWLEDGE about the various subjects. It provides a glimpse on man's understanding of nature's laws (Physical, Chemical, etc.) and some applications exploiting those principles. If one wants to change the syllabus to a more practical oriented one, CBSE provides a better option than other boards. However, its stupid to say that I got 12 out of 100 because I was a budding Faraday or Einstein. It was not a master level course to explore solutions during the exam. It just shows the author is seeking an excuse for his poor performance, whose true reasons lie elsewhere. If one doesnt understand the time or content limitations in an exam at 10th 12th level, they should have opted to move out of school and explore their scientific temper outside the school environment.
India has a vast majority of uneducated children and only a 'cookie cutter' syllabus can provide 'basic' understanding of concepts in various subjects. Experimenting on concepts can be done outside the class or at a higher level of educations (Masters Phd, etc.) Not within the school level , and not at the expense of one's parent's money. One should study for whats in demand in the job market, because a vast majority of households are banking on their children's performance for their financial needs. All these romantic ideas about education are just that..ROMANTIC IDEAS that are not practical. No offense meant and nothing personal.

Ashwin
kavidha1 Years ago
yevalavu arumayana karuthukal... intha pakuthiil yeluthapatta varthaikal anaithum unmaiyanavai. ithai padikum pothu en manathil nedunalaka iruntha karuthai yaravathu solla ketal yevalavu santhosham kedaikumo athu kedaithathu...
vinod kumar1 Years ago
welcome idiots we will create new !!!
MUTHUKUMAR1 Years ago
Without IDIOTS there is NO GENIUS in the WORLD. This film is another Example for that.. so Don't Discourage the learner and dont treat them as Idiots.
-By
IDIOT
RadhaRangaraju1 Years ago
மாணவர்களின் அறிவையும்,சிந்திக்கும் திறனையும் அதில் உள்ள நியாயங்களையும் புரிந்து கொள்ளும் திறன், க்ரியேட்டிவிடி ஆசிரியர்களுக்கு இல்லாமல் போவதின் விளைவு இது....
A P IRUNGOVEL1 Years ago
திரு பகவத் அருண் - வாழ்த்துக்கள்.

மிக அருமையான கருத்தை பதிந்துள்ளீர்கள். இது யார் காதிலும் கருத்திலும் சலனத்தை மட்டுமே ஏற்படுத்திவிட்டு அமுக்கப்பட்டு விடுமோ என்று சற்று கலக்கமாகவும் இருக்கிறது.

எனது பள்ளி நாட்களிலிருந்து என்னும் இருந்த எத்தனை பேர் என்னைச் சேர்ந்தவர்களாலேயே கொலை செய்யப் பட்டார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்

வேதனைதான் அதிகரிக்கிறது.

என்னுள் இருந்த பாடகன்,

என்னுள் இருந்த கவிஞன்,

என்னுள் இருந்த ஓவியன்,

என்னுள் இருந்த நல்ல ஆசிரியன்,

என்னுள் இருந்த ஆத்மர்த்தமான ஒரு சமூக சேவகன்,

என்னுள் இருந்த ஒரு நல்ல நிர்வாகி -

இப்படி எத்தனையோ பேர், ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள பல அவதாரங்கள் ஒவ்வொரு நாளும் மக்கு மக்கு என்று சொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.

ஓர் உண்மை அந்த கொலையை நாமும் அறிந்தோ அறியமலோ செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் அறிந்து சற்று வெட்கப் படத்தான் வேண்டும்.

திரு பகவத் அருண் - வாழ்த்துக்கள்.
Pradeepa1 Years ago
யதார்த்தம் அம்மா முதல் ஆசிரியர் வரை அரிந்து புரிந்து கொல்ல வேன்டிய விடயம்
shanmugam1 Years ago
மிகவும் யதார்த்தமான கருத்துக்கு நன்றி
vinay1 Years ago
தலைவாஉ அர் க்ரெஅட்
ramesh 1 Years ago
நல்ல கருத்து
ராசுஸ்1 Years ago
மிக அருமை பகவத் அருண் சார் அவர்களே. மேலும் யதார்த்தமான உண்மைகளை அழுத்தமாக பதித்த உங்கள் கட்டுரை மீ்ண்டும் மீண்டும் எனது மனதை வாசிக்க வைக்கிறது.
Senthil1 Years ago
interesting read..I too remember similar incidents in my school life..
b.ravi1 Years ago
worms of thoughts of these to penetrate and kindle the edn sys to unearth the talented young buds to blossom truly to make the society feel the fragrance..who has to bell the cat? Premji..N.Murthy...can u pl make it up!!!!!!!
sathya1 Years ago
நன்பன் படதொட,சூபர் உங்கல் விமர்சனம்
Dr.Mrs.MeenakshiPrabhakar1 Years ago
தன்னுடைய தனித்திறன் நிரூபித்து கல்வித் தகுதி பெறும் உரிமை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது.பள்ளிக் கல்வி , உயர்கல்வித் திட்டத்தால் இம்முறைக்கு வரையறை அமைக்கப்படவில்லை.தனியாக, தானாகவே தன் திறன் வளர்த்துக் கொள்ள இணையதளம் உதவுகிறது.அதற்கான கல்வித் தகுதி கோர அரசு வழி தந்தால், இன்றைய பள்ளிக்கல்வி, உயர்கல்வி திட்ட முறைகள் கட்டாயமாக இல்லாமல், விரும்புவோருக்கு என மாறும்.லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸஸ் கொண்டு கல்வித் தகுதி பெறும் முறை எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தும்.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கழகத்தில் கிடைக்காத தனித் திறன், ஹார்வார்ட் பல்கலை கழகத்தில் கிடைக்காத தனித் திறன் உலகன் என்னும் பல்கலைக் கழகத்தில் இயல்பாக, கடின உழைப்பு இல்லாமலேயே, மனமோன்றிய ஈடுபாட்டால் கிடைக்கும்.இங்குதான் புத்தாக்கம் மலரும்.

"கல்லூரியில் உயிர் வேதியியல் தேர்வில் மரபணு சம்பந்தப்பட்ட ஒரு கேள்விக்கு மட்டுமே நான் இரண்டரை மணி நேரமும் என்னையறியாமல் விடையை தாண்டி பல புதிய புதிய சாத்தியங்களை வரையறுத்த", இது போன்ற சந்தர்ப்பங்கள் நிஜ வாழ்வில் நிறைய பேருக்கு நிகழ்வதுண்டு.தொடர் மதிப்பீடு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் குறிப்பிட்ட கால அளவிற்குள் விடையளிக்கும் சுருக்கி வரையும் தேர்வு முறை நீங்கும்.

இணைய தளம் வந்த பிறகு நேரிடை தொடர்புக்கு, குறிப்பிட்ட கால அளவிற்கு தேவைப்பட்டதை சொல்லும் நெருக்கடி இல்லாத நிலையில் , கால அவகாசம் ஏற்படுத்திக் கொண்டு தகவல்களை முழுதும் படிக்கும் பழக்கம் பெருகி விட்டதால் இடம், பொருள், காலம், அதிகாரம், தகவலறிவில் செறிவு போன்ற மாயைகளை கடந்து நிஜத்தில் வாழ உரிமை பெற்றிருக்கிறோம்.இது நடை முறைக்கு வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிகளாக இல்லாமல் நெறிமுறைகள், தனி மனிதன் சார்ந்து விதிகளாக மாறும்.
akshay1 Years ago
well said.
Narayanan1 Years ago
மெலான்மை படிக்கும் நான் பொருலாதாரத்தில் தோல்வியுட்ரேன்.அனால் என் காந்திகிரி கடை இப்போது வுலகம் முலுக்க செல்கிரது
vaishnavi1 Years ago
well said
Ravi1 Years ago
ஸோ.... என்ன பண்ணலாம்? குறை சொல்வது எளிது.
manoj1 Years ago
it's really true.............
karman1 Years ago
ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயம். வீட்டைவிட பிள்ளைகள் அதிகநேரம் இருக்கும் பள்ளி
naveen1 Years ago
This one page gives me the effect of watching that full film..Really superb..Plz publish this in vikatan
 Displaying 1 - 25 of 28