அன்றொரு மழை நாள் - ஆர்த்தி நாகராஜன்

- ஆர்த்தி நாகராஜன்

சன்னலோர கம்பிகளின்
மழைத துளி வழியே
பயணம்

தேனீர் கோப்பையும்
தீராத தாகமுமாய்
தனித்து விடப்பட்டு
நினைவுகளை
அள்ளி பருகிக்கொள்கிறேன்

துளிர்த்துக் கிளம்பும்
மண்வாசனையோடு - இதயம்
வெடித்துக்கிளம்பும்
என் விதிகளுக்கு அடங்காத
எண்ணங்கள்

கொட்டிதீர்க்கும் மழையினூடே
உலர்ந்த உள்ளமுமாய்
ரகசியமாய் என் கண்ணீரும்
உலவி போகும் உணர்வுகளற்ற
உதட்டு புன்னகை
முழுவதையும் கரைக்க
மழையும் முயற்சிகிறதோ?

*

செல்லச் சண்டையின்
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி

அழிந்து போன
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!

*


Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
M Arul raj
அருமை தோழி. வாழ்த்துக்களுள்

30 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.