வாழிடம் தேடி - யுவராஜா

- யுவராஜா

தூண்டியவன் துயில் கொள்கிறான்
தூண்டப்பட்டவன் துக்கம் செய்கிறான்
தடையின்றி பயணிக்கிறது ஆக்கபூர்வமான
மனிதவளம் அழிவுப்பாதையில்...

உணர்வுகளின் விளையாட்டில்
உயிர் தோற்கிறது
உரிமைகள் மீறப்படுகின்றது...

சிந்திய உதிரமும் சிறுநொடியில்
மண்ணில் கலந்து தின்மமாகின்றது
வன்முறையின் நிறமும் சிகப்பு...

இயன்றவன் இறையாண்மை பேசுகிறான்
இயலாதவன் அரசியல் பேசுகிறான்
பாவப்பட்ட மனிதமோ பல்லக்கில்
பயணிக்கிறது பாதாளத்தில் விழ...

வடக்கும் தெற்கும்
கிழக்கும் மேற்கும்
திசையின்றி பயணிக்கிறது
வன்முறையற்ற வாழிடம் தேடி!

*


Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Ananth
மிகவும் அருமையான கவிதை. எனக்கு ரொம்ப பிடித்திருக்கு...

112 day ago | Report abuse

Mchithi
super chellam

116 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.