Hi... உங்கள் படைப்புகள் எதுவானாலும் யுனிகோட் ஃபான்ட்டில் டைப் செய்து, உங்கள் புகைப்படத்துடன் youthful@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்       
   
தாய்
 

- அமுதன்

தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள்

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் - பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலே
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ...?

 

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Ramalakshmi
அருமை.

356 day ago | Report abuse

T.V.Radhakrishnan
நன்றாக இருக்கிறது

356 day ago | Report abuse