சென்னை, செப்.23 : தர்மபுரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை சென்னையில் இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் " 2009 - 2010-ம் ஆண்டிற்கான அரசு தர்மபுரி மருத்துவ கல்லூரி மற்றும் கற்பக வினாயகர் சுய நிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்ட படிப்பிற்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு இம்மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான தெளிவுரைகள்
மற்றும் கலந்தாய்வு கால அட்டவணை
இங்கே க்ளிக் செய்க.
|