இயற்கை வளம் தனை
அள்ளித் தந்த நயாக்கரா...
இரு விழி பார்த்தால் வயாக்கரா...
சூரியனின் முத்தம்
நயாக்கரா உதட்டில் உதயமாக...
பல வண்ணத் தேசியக்கொடி
அசைவது போல் தோற்றம்.
வெண்முகில் நீரோடு நீராடுவது போல்
பார்ப்பவர் கண்ணிற்கு படும்.
நீர் வந்து நிலைக்குத்தாய் விழும் போது
அதன் தூவானம் எம் மீது
மழைத் துளியாய் படும் போது.
குடை கொண்டு சென்றால்...
சுகமின்றிப் போய்விடும்.
ஆழ் கடலா...? அடித்துச் செல்லும்
அலை அருவியா...? இந்த நயாக்கரா
கனடாவின் கண்ணில் பட்டது.
களையாத நினைவை ஏட்டில் எட்டியது.
முதல் முறை பார்த்த போது
முகம் மலரவில்லை.
வியப்பின் அறிகுறி
விழியில் தெரிந்தது.
ஒரு கணம் என்னையே இழந்தேன்.
உயரத்தின் உயர்வு...
அகலத்தின் அளவு...
அதன் விட்டம் தான் என்ன...?
கணக்கு வாத்தியார் நினைவில்.
நாட்டைப் பிரிக்கும் எல்லையில்.
நாட்டின் அடிக்கல்லா நயக்கரா...?
நம் காதல் கனிந்த இடம் இங்கே...!
நம் சொத்து அழிந்த இடம் இங்கே...!
சுற்றுலா சுகம் கண்டது இங்கே...!
சூதாட்டம் பணம் கண்டது இங்கே...!
புதைக்கப் பட்ட வைரவரிகள்.
விளையப்பட்டனர் நயாக்கரா மண்ணில்.
கவி கண்டது கார் மேகம்
வந்து இறங்கியது மழை வடிவில்.
உங்கள் அபிசேகா.